முதன்மை உள்ளடக்கத்திற்குச் செல்

யாருடா நீங்கலாம் நல்லவன்னு காட்டிக்க ஒரு டிராமா ஸ்டேஜ் பண்றீங்க பாரு... அத தான் சகிச்சுக்க முடியல..!

"நல்ல” என ஒரு சொல் தமிழில் உள்ளது. அது பெரும்பாலான இடங்களில் மாட்டிக்கொண்டு பேய் முழி முழிக்கிறது.



நல்ல மகனா இருப்பது நல்ல கணவனாக, நல்ல தொழிலாளியாக நல்ல பக்தனாக என இந்த ”நல்ல” நீடிக்கும்... 

இந்த நல்ல என்பதற்கு சமூகம் கொடுத்திருக்கும் அர்த்தம் என்பது "கொத்தடிமையாக இரு" என்பதாக இருக்கும். 

உன் மேல் என்ன அதிகாரம் செலுத்தினாலும் நீ ஏன்னு கேட்கப்பிடாது... எல்லா மதங்களும் அப்டிதான்.. ஏன்னே கேட்க கூடாதுனு இருக்கும். இந்த மதங்கள் எல்லாம் கூடி நல்ல என்ற சொல்லு எல்லா உறவுகளிலும் நிலைகளிலும் விளக்கம் கொடுத்து வைத்திருக்கும். அதன் படி அந்த மத கடவுளே வாழ்ந்தது இல்லை. அது வேறுவிடயம். ஆனாலும் இந்த மத சமூகம் அந்த “நல்ல” என்ற ஒன்றில் நிலைபெற போராடிக்கொண்டிருக்கும். 

சரி ’நல்ல’ வாழ என்ன செய்யனும். ரொம்பவே சிம்பிள். நீங்க இந்த உலகத்தில வாழ வந்த மத்த கோடிக்கணக்கான உசுரு போல ஒரு உசுரு. எதையும் காப்பாத்த அழிக்க வரல. நா இல்லாட்டியும் இந்த உலகம் அது பாட்டுக்கு செயல்படும்.


நா இருந்தாலும் செயல்படும். யாரும் எனக்கு சர்டிபிகேட் கொடுக்க செயல் செய்யல. நானும் யாருக்கும் சர்டிபிகேட் கொடுக்க வரல. எனக்கு இதெல்லாம் புடிச்சிருக்கு அதனால செய்றேன். என் வீட்ல இதெல்லாம் எனக்கு பயிற்சி கொடுத்திருக்காங்க. அதுனால இந்த மாதிரி நான் செய்றேன். வேறு ஒருத்தனுக்கு வேற ஒன்னுல பயிற்சி கொடுத்திருக்காங்க.. அவன் அப்டி செய்றான்.

நான் படிச்சத வச்சு வாழ்வை இப்படி புரிஞ்சு வாழ்றேன்.. அவன் அவன்படிச்சதை வச்சு அவன் புரிஞ்சபடி வாழ்றான். இவ்ளோதான் வாழ்க்கைனு நம்பிட்டா போதும்.இந்த நல்லங்கிற சர்டிபிகேட் விட்டு வெளியே வந்திடலாம்.

நல்ல யோசிச்சா இந்த சர்டிபிகேட் கையில வச்சிருக்கவன் எல்லாம் ஒரு ஆள்பிடிக்கிற புரோக்கர் தான். இதெல்லாம் நல்லது வெளிப்படையா சொல்லுங்க ஒரு குரூப் வந்து கூப்டு போகும். அதெல்லாம் நல்லதுனு சொன்னா இன்னொரு க்ரூப். இவ்ளோதான் இங்க. 

நீங்க கூட்டமா வாழ முயற்சி செய்ங்க. கும்பல்ல இருக்க முயற்சி செய்யாதீங்க. கூட்டமா வாழ நிறைய வாழனும்.. கும்பலா வாழ எதுவுமே தேவையில்லை. 

நிறைய வாழ, அல்ரெடி வாழ்ந்துட்டு இருக்கிற கொஞ்சம் திருப்பி பாருங்க. எதெல்லாம் சுய தேடல், எதெல்லாம் திணிப்புனு... நிறைய புரியும். அந்த புரிதல் படி வாழுங்க.. அது போதும்


*பி.கு : இது ஒரு "நல்ல" பதிவாக இருக்க வேண்டும் என நான் எண்ணி பதிவு செய்யவில்லை 

கருத்துகள்

இந்த வலைப்பதிவில் உள்ள பிரபலமான இடுகைகள்

தமிழ்ச் சினிமா வரலாற்றில் சினிமா மூலம் உண்மையான அரசியல் செய்யும் நடிகர் சூர்யா

இங்க நிறைய பேருக்கு 'அரசியல்' என்றாலே ஓட்டு வாங்கும் அதிகார அரசியல் மட்டுமே என நம்புவார்கள்.  அறிஞர் அண்ணாவும் , கலைஞர் கருணாநிதியும் அரசியலில் இருந்து சினிமாவை பயன்படுத்திக் கொண்டவர்கள். எம்ஜியார் சினிமாவில் இருந்துகொண்டு அரசியலை பயன்படுத்திக் கொண்டு பின்னர் நேரிடை அரசியலுக்கு வந்தவர்.  சினிமாவில் இருந்து நேரிடையாக அரசியல் என வரும் கோமாளிகளை தமிழ்நாடு சிரித்தபடியே வழி அனுப்பி வைக்கும். தமிழ்ச் சினிமா வரலாற்றில் சினிமா மூலம் உண்மையான அரசியலை செய்பவர் நடிகர் சூர்யா தான். கல்வி தான் ஒருவரை சமூகம் நோக்கி நகர்த்தும் என்பதை வெகுவாக கவனித்து அதனை தேர்வு செய்து பதினைந்து ஆண்டுகளாக தொடர்ந்து நடத்திக் கொண்டிருக்கிறார்.  இத்தனைக்கும் சூர்யாவைவிட அதிகம் சம்பளம் வாங்கு நடிகர்கள் பலர் ஏற்கனவே திருமணமான தன் மன்றத்து ஆட்களுக்கு திருமணம் செய்து சேவை என சொல்லிவருகிறார்கள். அல்லது ரசிகர்களே நிதிதிரட்டி செலவழிக்கும் சேவைகளை தங்கள் கணக்கில் எழுதி பொய்யாய் பெருமிதம் கொள்வர்கள். இவையெல்லாம் ரசிகனை காவுகொடுப்பதுதான். சூர்யா உருவாக்கும் மாணவர்களின் எண்ணிக்கை அதிகரித்துக்கொண்டே செல்கிறது. நே...

அன்பும் வன்முறையும்: அதிர்ச்சியான நேர்மையான உணர்வு

இந்த உலகத்தில்  ஆகப்பெரிய வன்முறை எது தெரியுமா..?  அன்பா இருக்கிறதுதான். பெரும்பாலும் அன்பும் வன்முறையும் எப்போதும் ஒரே அடிப்படையில் தான் இயங்கும். அன்பும் வன்முறையும் நான்தான் சரினு ஒரு கட்டத்தில நகர்ந்து நிக்கும்.  அன்பா இருக்கிறது வன்முறையானு கேட்டா அப்டி இல்லை. அன்பா இருக்கிறதுக்குனு ஒவ்வொரு உறவும் ஒரு விதிமுறையை உருவாக்கி வச்சிருக்கும். code of ethics மாதிரி.  அந்த நெறிமுறைதான் பிரச்சினை. ஒவ்வொரு மனிதருக்கும் ஒரு நெறிமுறை. இவருக்கு அன்பை இப்படி சொல்லனும். அவருக்கு அப்டி சொல்லனும். இந்த டைம் டேபிள் தான் அன்புனு ஒரு காலத்திலே பதிஞ்சு போகும். அந்த டைம் டேபிள் கொஞ்சம் மிஸ் ஆனா நீங்க அன்பா இல்லைனு ஆகிபோகும். எந்தெந்த உறவுகள்ள எல்லாம் பிரச்சினைனு பார்த்தா பல உறவுகள்ள இந்த டைம் டேபிள் தான் பிரச்சினை.  அன்பா இருக்கிறதுக்கு ஒன்னுமே செய்ய தேவையில்லைனு இங்க புரியல. சாய தோளும் கேட்க காதும் போதும்னு தான் அன்பு தொடங்கும். ஒரு கட்டத்தில அது இல்லாமலே நிறைய நிரம்பி போகும். இதுல என்ன பெரிய காமெடின்னா நமக்கு ஒருத்தர் அன்பு டைம்டேபிள் போட்டு  நிக்க வச்சா, நாம இன்னொருத்தர...

தமிழ்நாட்டில் இருப்பதாலே பாலாவின் சர்ச்சைகள் மட்டுமே பேசப்பட்டு வருகிறதோ..?

தமிழ் சினிமா இயக்குனர்களின் உச்சபட்சம் அடையாளங்களில் ஒருவர் இயக்குனர் பாலா. அவரது சேது , அவன் இவன் ஆகிய படங்களை தவிர வேறு எந்தவொரு படத்தின் ஒரு பிரேமை கூட இன்னொருவர் யோசிக்க முடியாது. காட்சிப்படுத்திவிட முடியாது .  சேது (1999), நந்தா (2001), பிதாமகன் (2003), நான் கடவுள் (2009), அவன் இவன் (2011) , பரதேசி (2012), தாரை தப்பட்டை (2016), நாச்சியார்(2018) என நீள்கிறது இவரது இயக்குனர் வாழ்க்கை.  நந்தா மற்றும் பரதேசி படங்களில் அவர் கையாண்டிருக்கும் திரை மொழி ரொம்பவே அடர்த்தியானது. இதற்கு முன்னர் இப்படியான வடிவில் படங்கள் வந்திருக்கிறதா என்றால் கண்டிப்பாக இல்லை. நந்தா படத்தில் சூர்யாவின் கேரக்டரை உருவாக்கிய விதம் பயன்படுத்திய விதம் அதன் உடல்மொழி எல்லாமே திரைப்பட கனவுகளில் இருப்போர் கவனிக்க வேண்டியது.  பரதேசி படத்தில் அந்த பாதிரியார் கேரக்டரை கோமாளியாக்கி சறுக்கி இருந்தாலும் அந்த படமும் ஒரு பாடம் தான். கேமரா தொடங்கி ஒவ்வொரு பிரேமும் நமக்கு பாடம் சொல்லித்தரும். நான் கடவுள் படத்தை இன்னும் கொஞ்சம் புரியும்படி எடுத்திருக்கலாம் என்பது என் பார்வை. திரைமொழி ஆக்கலில் அந்த படத்தின் கடைசி...